செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

அம்மாபேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-15 11:01 GMT   |   Update On 2019-10-15 11:01 GMT
அம்மாபேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாபேட்டை:

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தேசிய புதிய கல்வி கொள்கையை கண்டித்தும், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார சீர்கேடுகளை நீக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் இனியவன் தலைமை தாங்கினார். பாபநாசம் சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழன் முன்னிலை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் விக்னேஷ் வரவேற்றார், இதில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழருவி, குடந்தை சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லை வளவன், மாநில துணை செயலாளர் வெற்றிவேந்தன், பாசறை மாவட்ட துணை செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags:    

Similar News