செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணாபுரம் அருகே பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

Published On 2019-10-14 16:12 GMT   |   Update On 2019-10-14 16:12 GMT
கிருஷ்ணாபுரம் அருகே குடும்ப தகராறில் பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மாரவாடி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி ஆர்த்தி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகியுள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆர்த்தி வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News