செய்திகள்
கீழடியில் பயணம் செய்த முக ஸ்டாலின்

கீழடியில் இருந்தபோது மனது சந்திரயானை போல் பறந்து சென்றது - முக ஸ்டாலின் பெருமிதம்

Published On 2019-09-28 10:04 GMT   |   Update On 2019-09-28 10:57 GMT
கீழடியில் இருந்தபோது என் மனது சந்திரயானை போல் பறந்து, உயர்ந்து சென்றது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கீழ்டி பயணம் குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கீழடியில் நின்றிருந்த போது மனதோ வியப்பிலும், பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயானை போல் பறந்து, உயர்ந்து சென்றது.

கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும், செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள்.

அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும், பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம். பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News