செய்திகள்
டாஸ்மாக்

காந்தி ஜெயந்தி - நெல்லையில் 2ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

Published On 2019-09-28 08:16 GMT   |   Update On 2019-09-28 08:16 GMT
நாடு முழுவதும் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறி உள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவுப்படி தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுக்கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் அனைத்தும் காந்தி ஜெயந்தி தினத்தன்று மூடப்பட வேண்டும். மேலும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்.

எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல், தங்கும் விடுதிகளில் உள்ள மதுபான கூடங்கள் 2-ந்தேதி மூடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News