செய்திகள்
ராமநாதபுரம் அருகே மது குடித்த தகராறில் ரெயில்வே ஊழியர் கொலை - வாலிபர் கைது
ராமநாதபுரம் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து ராக்கு (வயது 61 ). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரும் கொட்டகை பகுதியைச் சேர்ந்த கந்தவேல் மகன் மதன்குமார் (27) என்பவரும் கண்ணந்தை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அங்கு இவர்கள் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது முத்துராக்கு கையில் இருந்த மோதி ரத்தை மதன்குமார் கழற்ற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து ராக்கு அவரை கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அப்போது மதன்குமார் அருகில் கிடந்த கடப்பாறையை எடுத்து முத்து ராக்குவை குத்தினார். இதில் முத்துராக்கு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர்.