செய்திகள்
பொள்ளாச்சியில் கஞ்சா பதுக்கியவர் கைது
பொள்ளாச்சியில் கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்குள்ள கே.சி. பார்க் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.