செய்திகள்
முக ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - முக ஸ்டாலின்

Published On 2019-09-10 10:31 GMT   |   Update On 2019-09-10 10:31 GMT
முதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார்.

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டவை. தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் ரூ.46,091 கோடி அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு, 2.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

சிலரை பல நாள் ஏமாற்றலாம். பலரை சில நாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News