செய்திகள்
திறந்த வெளியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள்.

காரிமங்கலம் பகுதி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதி இன்றி மாணவர்கள் அவதி

Published On 2019-09-03 13:27 GMT   |   Update On 2019-09-03 13:27 GMT
காரிமங்கலம் பகுதி அரசுப் பள்ளி கட்டிடம் பழுதடைந்து விட்டதால், அங்குள்ள 2 வகுப்பறைகள் பள்ளியின் மரத்தடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. புதிய கட்டிடம் கட்ட கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட குப்பாங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குப்பாங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்புவரை இப்பள்ளியில் மொத்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 40ஆக இருந்து வந்தது. இதனால் இந்த பள்ளி ஆசிரியர்களின் கடும் முயற்சிக்கு பின்னர் நடப்பாண்டில் 100-க்கும் மேற்பட்ட  மாணவர்களாக உயர்ந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்களும் குப்பாங்கரை அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பள்ளியின் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால் மீண்டும் மாணவர்கள் எண்ணிக்கை குறையுமோ என்ற அச்சம் பெற்றோர்கள் இடையே நிலவுகிறது. 

இதுகுறித்து குப்பாங்கரை பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில்,

குப்பாங்கரை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஓட்டு கட்டிடத்தில் இருந்த வகுப்பறை கட்டிடம் பழுதடைந்து விட்டதால், அங்குள்ள 2 வகுப்பறைகள் பள்ளியின் மரத்தடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த ஓட்டு கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள மின் கம்பத்தையும் இடமாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News