செய்திகள்
தற்கொலை

திருபுவனை அருகே அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை

Published On 2019-08-28 09:12 GMT   |   Update On 2019-08-28 09:12 GMT
திருபுவனை அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை அருகே திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம்., லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (வயது56). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகத்தின் மகன் மாயமாகி விட்டார். மகன் மாயமானது முதல் ராணி சோகத்துடன் இருந்து வந்தார்.

இதனால் ராணிக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. மகள்களுக்கு திருமணமாகி அவர்கள் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் சண்முகம் லாரி வேலைக்கு செல்வதால் ராணியை கவனித்து கொள்ள யாரும் இல்லை. இதனால் அவர் விரக்கதியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று ரத்த அழுத்த நோய் போக்குவதற்கான வீட்டில் வைத்திருந்த 30 மாத்திரைகளை ராணி தின்று விட்டார்.

அன்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய சண்முகம் வீட்டில் ராணி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராணி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News