செய்திகள்
முக ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து மேல்முறையீடு

Published On 2019-08-02 08:26 GMT   |   Update On 2019-08-02 08:26 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிஆதிகேசவலு இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் நீலகண்டன் ஆஜராகி கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது வழியில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அவர் அந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மு.க.ஸ்டாலின் அந்த மண்டபத்திற்குள் சென்றார் என்று கூறி அந்த மண்டபத்திற்கு ஆம்பூர் வட்டாட்சியர் சீல் வைத்தார்.

இதனால் மண்டபத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது . இந்த சீலை அகற்ற கோரி தொடரப்படும் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனு தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News