செய்திகள்
தற்கொலை

பெற்றோர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-07-16 10:35 GMT   |   Update On 2019-07-16 10:35 GMT
கோவை கவுண்டம்பாளையம் அருகே பெற்றோர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). இவரது பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம், சிவாஜி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மது குடித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய சகோதரர் பிரபு (வயது 19) போலீசாருக்கு தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News