search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore suicide"

    • கள்ளக்காதலி அவரது கணவருடன் சென்றதால் முரளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்த முரளி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும் சூரியகலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.

    திருமணமான 6 வருடங்களுக்கு பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.

    அதன் பின்னர் முரளிக்கு நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நிஷா முரளியை பிரிந்து சென்றார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முரளிக்கு திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண்ணின் வீட்டிற்கு செல்லும் முரளி அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து இளம்பெண் தனது கள்ளக்காதலன் முரளியிடம் கூறினார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் கணவன்-மனைவி என கூறி துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை காணவில்லை என மதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர். இளம்பெண் கோவையில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    தனது கள்ளக்காதலி அவரது கணவருடன் சென்றதால் முரளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டு 3 நாட்கள் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
    • உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீவள்ளி நகரை சேர்ந்தவர் சிபி சுப்பிரமணியம் (வயது 43). திருமணமாகவில்லை.

    இவர் தனது தாய் வசந்தா (65) என்பவருடன் வசித்து வந்தார். அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தார். அவரை சிபி சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் கதவு 4 நாட்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிய போது யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

    அப்போது சிபி சுப்பிரமணியம் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டு 3 நாட்கள் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டிற்குள் மகன் தற்கொலை செய்து கொண்டது கூட தெரியமால் அவரது தாய் வசந்தா கடந்த 3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் தம்பிக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிவிட்டு காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை:

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கீதா (வயது 37).

    இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சக்திவேல்(16), ஹரீஷ்(10) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 25-ந் தேதி கீதா தனது குடும்பத்துடன் பெற்றோர் வசித்து வரும் குன்னூர் இந்திரா நகரில் நடந்த கருமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

    பின்னர் தனது மூத்த மகன் சக்திவேலுவுக்கு 10-ம் வகுப்பு பொது தேர்வில் கடைசி தேர்வு என்பதால் 30-ந் தேதி வீட்டிற்கு வந்தார். மகன் தேர்வு எழுதி விட்டு வந்த உடன் மீண்டும் குன்னூருக்கு புறப்பட்டு சென்றார். திருவிழா நடந்து கொண்டு இருந்த நிலையில் கீதாவின் கணவர் வேலுசாமி ஊருக்கு செல்லலாம் என கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலுசாமி தனது மனைவியை தாக்கினார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்து வந்தார்.

    இதனால் கீதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் தனது தம்பி தினேஷ் என்பவருக்கு தனது மகன்களை நன்றாக பார்த்து கொள்ளவும் என வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் குளியல் அறைக்கு சென்ற வேலுசாமி தனது மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    12 வயது வித்தியாசம் உடைய வாலிபரை தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் இடிகரை அருகே உள்ள ஆப்பிள் கார்டனை சேர்ந்தவர் அம்சா பிரியா. தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கவுசிகா (வயது 23). பி.எஸ்.சி. பட்டதாரி.

    இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த சரவண பிரசாத் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் கவுசிகாவின் தாய்க்கு தெரிய வரவே அவர் தனது மகளை கண்டித்தார். மேலும் உன்னை விட 12 வயது மூத்த வயதுடையவரை உனக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும். எனவே காதலை கைவிடுமாறு அறிவுறுத்தி வந்தார்.

    இதன் காரணமாக கவுசிகா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அம்சா பிரியா வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த கவுசிகா காதலரை தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வேலை முடிந்ததும் அம்சா பிரியா வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். வீட்டிற்குள் மகள் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அம்சா பிரியா அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கவுசிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் 12 வயது வித்தியாசம் உடைய வாலிபரை தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார். பின்னர் போலீசார் கவுசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சி அருகே காதலி பேசாததால் மனவேதனை அடைந்த இலங்கையை சேர்ந்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் இலங்கைகள் முகாமை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 23) கூலித்தொழிலாளி. இவரும் அதே முகாமை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் காதல் விவகாரம் அவர்களது குடும்பத்திற்கு தெரியவந்தது. இருவரது குடும்பத்தாரும் அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஒரு வருடம் கழித்து பெண்ணுக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அஜித் குமார் காதலித்து வந்த 17 வயது பெண் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கைகள் முகாமுக்கு சென்றனர். அப்போது அஜித்குமாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் அஜித்குமாரிடம் சரிவரப் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சஞ்சீவி சுரேந்தர் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சஞ்சீவி சுரேந்தர் அடிக்கடி தனது செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்தார்.

    இதன்காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்த சஞ்சீவி சுரேந்தர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே காதலி தற்கொலை செய்ய போவதாக கூறியதால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கருமத்தம்பட்டி:

    பெரம்பலூர் மாவட்டம் முருகன்குடி அருகே உள்ள குன்னத்தை சேர்ந்தவர் மல்லமுத்து. இவரது மகன் பாவேந்தன் (வயது 18). இவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி தான் கல்லூரி திறக்கப்பட்டது. பாவேந்தன் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவரும், அவரது ஊரை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டது. இதனால் மாணவி பாவேந்தனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதன்காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று மாலை இவரை தொடர்பு கொண்ட மாணவி தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாவேந்தன் தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பாவேந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது முதியவர். இவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவர் கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர்.

    இந்தநிலையில் அந்த பெண் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்தார்.

    வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த அந்த பெண்ணின் 60 வயது கணவர், மதியம் வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் வெகுநேரமாக தட்டி பார்த்தார். கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு அந்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதுபற்றி போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    மகளின் புனித நீராட்டு விழாவில் மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 31). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் ஏராளமானோர் வீட்டிற்கு வந்து இருந்தனர். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த செல்லமுத்து மது போதையில் வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    உறவினர் மத்தியில் தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதால் செல்லமுத்து மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட செல்லமுத்துவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கீரநத்தத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் சரண் (வயது 18). இவர் மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரணின் வீட்டிற்கு அவரது சகோதரி தனது 4½ வயது பெண் குழந்தையுடன் வந்து இருந்தார். சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பினார்.

    இதனை பார்த்த சரணின் பாட்டி நிர்மலா கொரோனா பரவல் தொடர்ந்து உள்ளதாலும், மழை பெய்து வருவதாலும் குழந்தையை வெளியே எதற்காக கொண்டு சென்றாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து நிர்மலா சரணின் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அவருக்கு அறிவுரை கூறினர். இதனால் சரண் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து 4 மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் சரண் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை அருகே உள்ள பன்னிமடை முல்லை நகரை சேர்ந்தவர் தாமரை கண்ணு (52). தொழிலாளி. இவரது தாய் கடந்த 20 நாட்களுக்கு முன் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் தாமரை கண்ணு மன வருத்தத்தில் இருந்தார். தாய் இறந்த துக்கத்தில் வி‌ஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி தாமரை கண்ணு இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை ரத்தினபுரி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பைனான்சியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள சம்பத் வீதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 42). இவர் அந்த பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இந்த தொழிலில் அனில்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்த அனில்குமார் தனது நண்பர்களை மது குடிக்க வருமாறு அழைத்தார். அப்போது நண்பர்கள் அனைவரும் ஜாலியாக மது குடித்து கொண்டு இருந்தனர். திடீரென அனில்குமார் நண்பர்களுக்கு தெரியாமல் மதுவுடன், வி‌ஷத்தை கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அனில்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அனில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×