கூடலூர் அருகே சொத்து தகராறில் இரு தரப்பினர் மோதல்
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் 9-வது வார்டு எல்லைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவருக்கும் உறவினர்களான சுதர்சன் தரப்பினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் ராஜா மற்றும் அவரது மகன் ஆகாஷ் ராஜா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மோதலில் ஈடுபட்ட சுதர்சன், சுதர்சினி, பிரதீஸ், மூர்த்தி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதே போல் சுதர்சன் தரப்பில் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜா, சாந்தி, ஆகாஷ்ராஜா, அபினயா ஆகியோர் தாக்கியதில் சுதர்சன் மற்றும் சுதர்சினிக்கு காயம் ஏற்பட்டதால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜா உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.