செய்திகள்

சாத்தூர் அருகே அங்கன்வாடி பணியாளரிடம் நகை பறிப்பு

Published On 2019-06-19 07:37 GMT   |   Update On 2019-06-19 07:37 GMT
சாத்தூர் அருகே அங்கன்வாடி பெண் பணியாளரிடம், மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

விருதுநகர்:

சாத்தூர் அருகே உள்ள வெற்றிலையூரணியைச் சேர்ந்தவர் கவிதா (வயது 36). இவர் வி.மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்தார்.

வீட்டில் இருந்து தினமும் பஸ்சில் கவிதா வேலைக்குச் சென்று வந்தார். நேற்று மாலை பணி முடிந்ததும் பஸ் ஏறுவதற்காக வெற்றிலையூரணி பஸ் நிறுத்தம் வந்தார்.

அவர் பஸ்சுக்காக காத்திருந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதா கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். அவரது அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மின்னலாய் மறைந்து விட்டனர்.

புகார் இது குறித்து வெம்பக்கோட்டை போலீசில் கவிதா புகார் செய்தார். 3 பவுன் நகை பறிபோனதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் கைவரிசை தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News