செய்திகள்

பு.புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே கார் மோதி மாணவன் பலி

Published On 2019-06-17 10:38 GMT   |   Update On 2019-06-17 10:38 GMT
பு.புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிந்தான். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புஞ்சை புளியம்பட்டி:

பு.புளியம்பட்டி புது ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சஞ்சய் (வயது 25). நேற்று இரவு சஞ்சய் மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

இதில் எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சஞ்சயை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான சஞ்சய் பிளஸ்-2 முடித்து இன்று கல்லூரிக்கு போக இருந்தார். கல்லூரி போகும் சமயத்தில் அவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News