செய்திகள்

அரூர்: மதுவில் விஷம் கலந்து குடித்த கூலி தொழிலாளி மரணம்

Published On 2019-06-12 16:55 GMT   |   Update On 2019-06-12 16:55 GMT
அரூர் அருகே தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள எலபுளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது50). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியில் சென்ற மனோகரன் மதுவில் எலிமருந்து கலந்து குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர் வீட்டிற்கு வந்து கதவை அடைத்து படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது உறவினர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவை மனோகரன் வெகு நேரமாகியும் திறக்கவில்லை.

இதனால் பதறி போன உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றனர். பின்னர் மனோகரன் நான் மதுவில் எலிமருந்து கலந்து குடித்து விட்டேன். அதனால் நான் சாகபோரேன் என்றார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News