செய்திகள்

தமாகா தொண்டர்கள் காங்கிரசில் இணைய வேண்டும் - கே.எஸ்.அழகிரி அழைப்பு

Published On 2019-05-10 07:34 GMT   |   Update On 2019-05-10 07:34 GMT
தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.



காங்கிரசில் வாழ்க்கையை தொடங்கியவர்கள் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம். எனவே, கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும். அவர்களுக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
Tags:    

Similar News