செய்திகள்

சென்னையில் தேர்தல் பணியில் 24 ஆயிரம் அரசு ஊழியர்கள் - 144 பறக்கும்படை அமைப்பு

Published On 2019-03-25 10:17 GMT   |   Update On 2019-03-25 10:17 GMT
சென்னை மாவட்டத்தில் உள்ள 3,754 வாக்குச்சாவடிகள் மற்றும் 72 துணை வாக்குச்சாவடிகளில் சுமார் 24 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சென்னை:

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிக்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெறும் தேர்தலில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 3,754 வாக்குச்சாவடிகள் மற்றும் 72 துணை வாக்குச்சாவடிகளில் சுமார் 24 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வாக்குப்பதிவுக்கு 10,797 வாக்குப்பதிவு எந்திரங்களும், 5298 கட்டுப்பாட்டு கருவிகளும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 16 மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேற்று முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 7, 14 மற்றும் 17-ந் தேதிகளில் 16 மையங்களில் 20,271 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தபால் ஓட்டு தொடர்பான ஆவணங்கள், பயிற்சி கையேடுகள் அளிக்கப்பட்டன.

மேலும் அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 48 பறக்கும் படை குழுக்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News