search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பணி"

    • பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
    • எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த 19ந் தேதி நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவ ட்டத்திற்கு 5 கம்பெனியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வந்திருந்தனர்.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பூரில் தங்கியிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் இணைந்து பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர். மேலும் பதட்டமான 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    இதையடுத்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேற்று இரவு முதல் ரெயில்களில் தெலுங்கானா புறப்பட்டு சென்றனர். அங்கு நடை பெறும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நாளை மறுநாள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் செல்கிறார்கள்.

    • மத்தியப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
    • தேர்தல் பணியை முடித்துவிட்டு சொந்த மாவட்டத்திற்கு திரும்பியபோது விபத்து.

    மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பேருந்தை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 21 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் காயமடைந்துள்ளனர்.

    போலீசார் தங்கள் தேர்தல் பணியை முடித்துவிட்டு மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த மாவட்டமான ராஜ்கருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, போபால்- பேதுல் நெடுஞ்சாலையில் பரேதா காட் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஷாலினி பராஸ்தே தெரிவித்தார்.

    விபத்து குறித்து அவர் மேலும் கூறுகையில், " ஐந்து காவலர்கள் மற்றும் மீதமுள்ள வீட்டுக் காவலர்கள் உட்பட மொத்தம் 40 ஜவான்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சிந்த்வாராவில் தேர்தல் பணி முடிந்து ராஜ்கருக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

    இதில், பலத்த காயம் அடைந்த 8 பேர் பெதுலில் உள்ள மாவட்ட மருத்துவமனையிலும், சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் ஷாபூர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏதிரே வந்த லாரியை இடிக்காமல் செல்ல முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது" என்றார்.

    • யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    நமது நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டு போடுவதற்கு வசதியாக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் 80 சதவீதத்துக்கு அதிகமான வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு இந்த பொருட்களை அனுப்பும் பணிகளும் இன்று முழு வீச்சில் நடைபெற்றன.

    இன்று மாலைக்குள் அனைத்து மையங்களுக்கும் மின்னணு எந்திரங்களை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்படுகிறது.

    தேர்தல் பணியில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட வரும் வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி 3 கட்டங்களாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் நாளை அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3726 மையங்களில் 708 மையங்கள் பதற்றமானவையாகும்.

    இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளை தலைமை செயலகத்தில் இருந்தபடியே அதிகாரிகள் கண்காணிக்க முடியும். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


    தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார், 190 கம்பெனி துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர், காவலர்கள் என 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களில் யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலையில் இருந்தே வாக்குப்பதிவு மையங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே ஓட்டு போட்டுவிட வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். இதனால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஓட்டு போட வருகை தந்து விடுவார்கள்.

    இதுபோன்று முன் கூட்டியே வரும் வாக்காளர்களை வரிசையில் நிற்க வைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இதனை கண்காணித்து வாக்காளர்களை வரிசையாக அனுப்பி வைக்க உள்ளனர்.

    சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையம் வரை சென்று ஓட்டு போடுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் பல மையங்களில் ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல மையங்களில் நுழைவுவாயல்களில் உள்ள படிகளே மாற்றுத்திறனாளிகளுக்கு தடைகளாக உள்ளன.

    சேத்துப்பட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாய்வு தளம் கைப்பிடிகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. ஊன்றுகோலை பயன்படுத்தி வரும் வயதான முதியவர்கள் இந்த சாய்வு பாதையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாமலேயே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற குறைகளை வாக்குப்பதிவு மையங்களில் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    நாளை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தேர்தல் நாளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன. இதன் பின்னர் ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
    • அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சென்னையில் 3 தொகுதிகளுக்கும் 11,843 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4469 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. நாளை காலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி வாரியாக அனுப்புவதற்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகிறது.

    3,726 வாக்குச் சாவடிகளுக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனத்தில் எந்திரங்கள், பிற உபகரணங்கள், பொருட்கள் அனுப்பப்படுகின்றன. தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து பணிகளும் இரவு பகலாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். 19-ந்தேதி வாக்களிக்க பொதுமக்கள் தயாராக வர வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், ஏழை-எளிய மக்கள் எளிதாக ஓட்டுப்பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பதட்டமான 708 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக போலீஸ் குவிக்கப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 65 சதவீத வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தலை சுமூகமாக நடத்த 708 நுண் பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணித்து அறிக்கை தருவார்கள். வாக்குச் சாவடி மையங்களில் பந்தல், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் இருந்தாலும் காத்திருந்து பதிவு செய்யுங்கள். வாக்களிப்பில் நமது கடமை, உரிமை.

    வாக்காளர்கள் 12 வகையான அடையாள அட்டையில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்களுக்கு உதவ "பெசிலிட்டி பூத்" ஒன்று அமைக்கப்படுகிறது. உங்கள் பெயரை சொன்னால் போதும், எந்த பூத்தில் ஓட்டு இருக்கிறது, எங்கு ஓட்டு போடலாம் என்று விவரமாக சொல்வார்கள்.

    பூத் சிலிப் 86 சதவீதம் வீடு வீடாக கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை வரை கொடுப்பார்கள். நாளை மதியத்திற்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். 899 செக்டார் ஜோனல் பார்ட்டி இதனை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.
    • இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது.

    பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணியை தொடங்கி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதனால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    புதுச்சேரியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே புதுச்சேரியில் வெயில் அதிகரித்து வந்தது.

    தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    போக்குவரத்து சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பிரசாரம் தொடங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் சோர்வில் உள்ளனர்.

    • கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
    • வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சிக்கு தி.மு.க. 2 தனி தொகுதிகளை ஒதுக்கி தொகுதி உடன்பாடு செய்துள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை கடந்த முறை போல ஒதுக்கி இருப்பதால் அடிப்படையான தேர்தல் பணிகளை அங்கு தொடங்கிவிட்டனர்.

    சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் மூத்த நிர்வாகிகள் சிலர் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கட்சியில் எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

    இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கத் தமிழன் விழுப்புரம் தொகுதியில் தன்னை போட்டியிட அனு மதிக்க வேண்டும் என்று தலைவர் திருமாவளவனிடம் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    அப்போது அவர் இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். கட்டாயம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார்.

    ரவிக்குமார் ஒருமுறை எம்.எல்.ஏ., ஒருமுறை எம்.பி.யாக இருந்துவிட்டார். இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். எல்லோருக்கும் தேர்தலில் நிற்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.

    விழுப்புரம் தொகுதி நன்கு அறிந்த தொகுதியாகும். வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சங்கத்தமிழனை போல மேலும் சிலர் போட்டியிட மனு கொடுக்க தயாராக உள்ளனர். வக்கீல் எழில் கரோலினை நிறுத்த வேண்டும் என்று மகளிர் அணி சார்பில் வலியுறுத்தப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சியில் விருப்பமனு வாங்கும் நடைமுறை பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இருந்தது இல்லை. ஆனால் இந்த முறை கட்சி நிர்வாகிகள் சிலர் விருப்ப மனுக்களை தாங்களாகவே முன் வந்து கொடுக்கின்றனர்.

    இதனால் ரவிக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? புதிதாக ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்பது கட்சியின் உயர்நிலைக் குழுவில் தான் முடிவு செய்யப்படும்.

    எனவே விழுப்புரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் யார்? என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.
    • நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி பொறுப்பாளர்கள் பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கட்சியின் தமிழ் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில செயலாளர் முருகானந்தம், மாநில பொது செயலாளர் சீனிவாசன் பாலகணபதி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், மண்டல தலைவர்கள் கண்ணாயிரம், நாகமாணிக்கம், மாரியப்பன், பாலசுப்பிரமணியம், மடத்துக்குளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்ன செய்தியாளரிடம் சுதாகர் ரெட்டி கூறியதாவது:- மக்கள் பாரதிய ஜனதா கட்சியை நம்புகிறார்கள். நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரும் மக்களுக்காக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×