search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election works"

    • நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.
    • நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி பொறுப்பாளர்கள் பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கட்சியின் தமிழ் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில செயலாளர் முருகானந்தம், மாநில பொது செயலாளர் சீனிவாசன் பாலகணபதி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், மண்டல தலைவர்கள் கண்ணாயிரம், நாகமாணிக்கம், மாரியப்பன், பாலசுப்பிரமணியம், மடத்துக்குளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்ன செய்தியாளரிடம் சுதாகர் ரெட்டி கூறியதாவது:- மக்கள் பாரதிய ஜனதா கட்சியை நம்புகிறார்கள். நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரும் மக்களுக்காக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் பணிகளில் ஈடுபட டி.ஜி.பி.க்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இன்று வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குட்கா வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டால் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி செயல்பட வாய்ப்புள்ளது.



    இதனால் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு. எனவே பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அவர் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார்.

    அதற்கு நீதிபதிகள், உங்கள் கோரிக்கை மனுவாக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் விசாரிக்கப்படும் என்றனர். #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    ×