search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament eleciton"

    • தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
    • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 26. 58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    முதல் முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவிகள் கூறுகையில், வாக்களிப்பதை சரியாக செய்ய வேண்டும் என்ற ஆவலும், பதற்றமும் உள்ளது. கொஞ்சம் பயமாகவும் இருக்கும். வாக்களிக்கும் முறை சொல்லி இருக்காங்க. முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஸ்கிப் செய்யக்கூடாது. சில சமயங்களில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களால் கூட முடிவு மாறலாம். இது நம்மளோட உரிமை என்றனர்.

    இதனிடையே முதல்முறை வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து வந்த மாணவி, வாக்களிப்பது கடமை, கட்டாயம். முதல் முறையாக வாக்களித்து புது அனுபவமாக இருந்தது. முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு அங்கு இருந்தவர்கள் வழிகாட்டினார்கள் என்றார்.

    • வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.
    • அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 1932 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 372 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் 670 போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் 800 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.

    மேலும் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்ட அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 35 பறக்கும் படைகள், 22 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டு 1065 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 268 மத்திய பாதுகாப்பு படையினர், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 462 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதே போல் பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2825 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    • மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • வெள்ளிக்கிழமை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. பிரசாரத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்து பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், நாளை மறுநாள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வருகிறார்.

    வெள்ளிக்கிழமை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #VCK #Thirumavalavan #PMK #ADMK #BJP
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ம.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக தொல். திருமாவளவன் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை கடந்த 2-ந் தேதி சந்தித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்தேன்.

    அப்போது அரசியலை பற்றி பொதுவான வி‌ஷயங்களை ஆலோசித்தோம். இந்த சந்திப்பின் போது தொகுதி ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. இதுவரை தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தர்மபுரி இளவரசன் மரணத்தில் அவர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் பா.ம.க. அவதூறு பரப்பினார்கள்.

    எனக்கு மிரட்டல்களும் வந்தன. சமூகவலைதளங்களிலும் அவதூறு பரப்பினார்கள்.



    நாங்கள் இரண்டு வி‌ஷயங்களில் தெளிவாக இருக்கிறோம். பா.ஜனதாவை எதிர்ப்பது மற்றும் பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    பா.ம.க. கூட்டணி தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் பேசினாலும் முடிவில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம் பெறும் என்பதே எனது கருத்து.

    அ.தி.மு.க. எந்த நெருக்கடியும் இல்லாமல் கூட்டணி அமைத்தால் அதில் கண்டிப்பாக பா.ஜனதா இடம்பெறும். ஆனால் பா.ஜனதா அரசு அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணி வைக்கும். இதுதான் தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் நன்மை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan #PMK #ADMK #BJP
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேட்கும் தொகுதிகள், எண்ணிக்கையில் இடங்களை வழங்காவிட்டால் தனித்து போட்டியிட போவதாக ஐ.ஜே.கே. நிறுவனர் பச்சமுத்து தெரிவித்துள்ளார். #IJK #Pachamuthu
    திருச்சி:

    இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    தோழமை கட்சியான பா.ஜ.க.வுடன் இன்றும் தோழமையுடன் இருந்து வருகிறோம். ஆனால் கூட்டணியில் இருந்து விலகி சென்ற கட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோருடனான நட்பு மட்டும் இருந்து அரசியல் செய்ய முடியாது. தமிழகத்தில் உரிய மரியாதை வழங்கப்படவேண்டும். தமிழக பா.ஜ.க.வானது எங்களை அலட்சியப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதிகள், எண்ணிக்கையில் இடங்கள் வழங்கினால் மட்டுமே தோழமையுடன் தொடருவதா? என்பது குறித்து பரிசீலிப்போம். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலோ, டி.டி.வி.தினகரன் தலைமையிலான கூட்டணியிலோ இடம்பெற மாட்டோம்.

    8 ஆண்டுகளில் எங்களது கட்சி நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. எங்கள் கட்சியின் கொள்கைகள் அனைத்தும் சிறந்தவை. எனவே மெதுவாகவே அவை மக்களிடம் சேரும். அரசியலில் இருந்து சம்பாதித்து மக்களுக்கு வழங்கும் கட்சியில்லை இது. சொந்த தொழிலில் இருந்து வரும் வருவாயில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி.

    கஜா புயல், தானே புயல் தருணங்களில் பாதிப்பு பகுதிகளை சேர்ந்த எஸ்.ஆர்.எம். குழும மாணவர்களின் கல்வி கட்டணத்தில் ரூ.55.5 கோடி விலக்கு அளித்துள்ளோம். ரூ.1 கோடியில் நிவாரண உதவி வழங்கியுள்ளோம். 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கி வருகிறோம். தொடர் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.

    புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை அப்புறப்படுத்தவும், அவற்றை தூள்களாக்கி எருவாக மாற்றி விற்கவும் தேவையான எந்திர உதவிகளை வழங்கியுள்ளோம். மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    வாக்குகளுக்கு தரப்படும் பணத்தை வாங்க வேண்டாம்? என 30 மாணவர்கள் கொண்ட குழு மூலம் சென்னை தொடங்கி குமரி வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். மேற்கு வங்க மாநில முதல்வரை போல செயல்பட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனி நாடாக மாற வேண்டியதுதான். சி.பி.ஐ. உள்ளிட்ட அந்தந்த அமைப்புகளுக்குரிய பொறுப்பை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.

    ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களது மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறுவதை ஏற்க முடி யாது. வேறு தலைவர்கள் வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும். மக்களவை தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிறுவனர் பச்சமுத்துவுக்கு அதிகாரம் அளிப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #IJK #Pachamuthu
    ×