செய்திகள்
தந்தை விபத்தில் படுகாயம் அடைந்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
கோவையில் தந்தை விபத்தில் படுகாயம் அடைந்ததால் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர். இவரது மனைவி சபானா பர்வீன் (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சபானா பர்வீனின் தந்தை விபத்தில் சிக்கினார். இதில் அவரது விரல்கள் சேதமடைந்தது. இதனால் சபானா பர்வீன் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சபானா பர்வீனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.