search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை"

    • வீட்டில் கீதா திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
    • மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள லக்காபுரம் புதுவலசு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (33). இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் லக்காபுரத்தில் உள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் கீதா திடீரென தூக்குபோட்டு கொண்டார்.

    இதையறிந்த சசிகுமார் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கீதா இறந்து விட்டதாக தெரிவித்து ள்ளார்.

    இதுகுறித்து, கீதாவின் தந்தை பழனிசாமி (50) அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அர்ச்சனா தேவி தங்கியிருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தேனி மாவட்டம் உப்பார்பட்டி, கருப்புசாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன் (48).

    இவரது மகள் அர்ச்சனா தேவி (20). இவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே எம்மாம்பூண்டியில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அர்ச்சனா தேவி இரவு தனது தந்தை மதுரை வீரனுக்கு போன் செய்து தான் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் காலை 10 மணியளவில் கம்பெனியின் உரியமையாளர் மதுரைவீரனுக்கு போன் செய்து மகள் அர்ச்சனா தேவி வேலை செய்பவர்கள் தங்கியிருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நம்பியூர் வந்த அர்ச்சனா தேவியின் தந்தை மதுரைவீரன் தனது மகளின் சாவுக்கு காரணம் கார்த்திகேயன் என்ற வாலிபரும், அவர் வேலை பார்த்த நிறுவனமும் தான் என புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×