search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    • அர்ச்சனா தேவி தங்கியிருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தேனி மாவட்டம் உப்பார்பட்டி, கருப்புசாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன் (48).

    இவரது மகள் அர்ச்சனா தேவி (20). இவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே எம்மாம்பூண்டியில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அர்ச்சனா தேவி இரவு தனது தந்தை மதுரை வீரனுக்கு போன் செய்து தான் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் காலை 10 மணியளவில் கம்பெனியின் உரியமையாளர் மதுரைவீரனுக்கு போன் செய்து மகள் அர்ச்சனா தேவி வேலை செய்பவர்கள் தங்கியிருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நம்பியூர் வந்த அர்ச்சனா தேவியின் தந்தை மதுரைவீரன் தனது மகளின் சாவுக்கு காரணம் கார்த்திகேயன் என்ற வாலிபரும், அவர் வேலை பார்த்த நிறுவனமும் தான் என புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×