search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father injured"

    கோவையில் தந்தை விபத்தில் படுகாயம் அடைந்ததால் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர். இவரது மனைவி சபானா பர்வீன் (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சபானா பர்வீனின் தந்தை விபத்தில் சிக்கினார். இதில் அவரது விரல்கள் சேதமடைந்தது. இதனால் சபானா பர்வீன் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சபானா பர்வீனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் அருகேயுள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது55). இவரது மகள் மனுஸ்ரீ (16). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த மனுஸ்ரீ நேற்று நாமக்கல்லுக்கு புறப்பட்டார்.

    கந்தசாமி மோட்டார் சைக்கிளில் அவரை பஸ் ஏற்றுவதற்காக அழைத்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கந்தசாமி, மனுஸ்ரீ ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு சகாதேவன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×