செய்திகள்
மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஆற்றில் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வெள்ளவேடு போலீசார் கூவம் ஆற்றுப்படுகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது புதுச்சத்திரம் அருகே ஆற்றுப் படுகையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மினி லாரியை சுற்றி வளைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமாரை தரக்குறைவாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் அசோக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.