செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியை இறந்த சோகத்தில் கண்ணீர் விட்டு கதறிய மாணவிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உடல் நலக்குறைவால் இறந்த ஆசிரியை உடலை பார்த்து மாணவ -மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் பிரேமசுந்தரி (வயது 40). இவர் கோட்டையூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
மாணவ- மாணவிகளிடம் அன்போடும், எளிமையாகவும் பழகக்கூடியவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது மாணவ-மாணவிகளுக்கு வருத்தத்தை தந்தது.
இந்த நிலையில் ஆசிரியை பிரேம சுந்தரி இன்று இறந்தார். இதனை கேள்விபட்ட மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசிரியை வீட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு அவர்கள் ஆசிரியை வீட்டின் முன்பு திரண்டு நின்றதை கண்ட பொதுமக்களும் கண் கலங்கினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் பிரேமசுந்தரி (வயது 40). இவர் கோட்டையூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
மாணவ- மாணவிகளிடம் அன்போடும், எளிமையாகவும் பழகக்கூடியவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது மாணவ-மாணவிகளுக்கு வருத்தத்தை தந்தது.
இந்த நிலையில் ஆசிரியை பிரேம சுந்தரி இன்று இறந்தார். இதனை கேள்விபட்ட மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசிரியை வீட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு அவர்கள் ஆசிரியை வீட்டின் முன்பு திரண்டு நின்றதை கண்ட பொதுமக்களும் கண் கலங்கினர்.