இந்தியா

கோடை விடுமுறை: திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2024-05-23 04:59 GMT   |   Update On 2024-05-23 04:59 GMT
  • கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
  • இலவச நேரடி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது.

திருப்பதி, மே. 23-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இதனால் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர். இதனால் இலவச நேரடி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது.

திருப்பதியில் நேற்று 80,048 பேர் தரிசனம் செய்தனர். 35,403 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News