செய்திகள்

மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-02-21 12:26 GMT   |   Update On 2019-02-21 12:26 GMT
சேலம் பள்ளப்பட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:

சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் அருகே உள்ள சித்தாகவுண்டர் தெருவை சேர்ந்தவர் வெங்கடசன்(வயது 43). கூலி தொழிலாளி. இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் பெற்று குடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவும் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் மனைவி பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வெங்கடேஷ் தகராறு செய்தார். எவ்வளவு தகராறு செய்தும் மனைவி பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். இதை பார்த்த மனைவி சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் மனைவி கதறி அழுதனர். இது குறித்த பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News