search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker suicide"

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் விரக்தி
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த செங்கிலிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) கூலி தொழிலாளி.

    இவரது மனைவி ஜெயந்தி. தம்பதியினருக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

    இதனால் மனமுடைந்த ரமேஷ் கடந்த 22-ந் தேதி விஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்க சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்று வலியால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அடுத்த சின்னபுஷ்பகிரி கிராமம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( வயது 60), தொழிலாளி.

    இவர் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரை சாப்பிட்ட பிறகும் கூட நோய் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த பன்னீர்செல்வம் கடந்த 15-ந் தேதி, தனது மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜித்குமாரை வழக்கமாக வேலைக்கு அழைத்து செல்லும் நபர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றார்.
    • சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் அஜித்குமார் (26), தச்சு தொழிலாளியான இவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஜோதி (22)என்ற பெண்ணை காதலித்து வந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அஜித்குமார், மனைவி ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அப்போது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஜோதி அம்மாப்பேட்டை பழனியாண்டி மருத்துவமனை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் நள்ளிரவில் அஜித்குமார் வேறு ஒருவரிடம் செல்போனை வாங்கி மனைவியிடம் பேசினார். அப்போது மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் ஜோதி மறுத்ததுடன் காலையில் வந்து விடுவதாக கூறினார்.

    இந்தநிலையில் அஜித்குமாரை வழக்கமாக வேலைக்கு அழைத்து செல்லும் நபர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அஜித்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதனை பார்த்த அவர் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் கதறினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதனை செய்த போது அஜித்குமார் இறந்து விட்டது தெரிய வந்தது.

    பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த வெப்பாளமரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 52). கட்டிட மேஸ்திரி.

    இவருக்கு கடந்த 2 வருடங்க ளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் திடீரென பூச்சி மருந்தை (விஷம் )குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை கண்ட குடும்பத்தினர் மயங்கி கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வநாதன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனவேதனையில் இருந்த கார்த்திக் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திக்(வயது47). கொத்தனார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு மதுபோதையில் கார்த்திக் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி பிரியாணி சமைத்து வைத்து இருந்தார். அதனை கணவருக்கு கொடுத்த போது சூடாக இல்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், பிரியாணி சூடாக இல்லை எனக்கூறி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டில் தூங்க சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனவேதனையில் இருந்த கார்த்திக் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சில மாதங்களுக்கு முன்பு மகேசுக்கு, செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47). இவர் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரத்திற்கு சென்ற மகேஷ் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார். அப்போது அந்த வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை விரைவு ரெயில் ஏறி இறங்கியதில் மகேஷ் தலையும், உடலும் துண்டானது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று மகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் மகேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு மகேசுக்கு, செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் 2 பேரின் வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை உறவினர்களுக்கும் தெரியவந்ததால், சமீபத்தில் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் இருவரையும் கண்டித்து, அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மகேஷ் தனது மனைவியின் ஊரான வேலாயுதபுரத்தில் வசித்து வந்த நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    கள்ளக்காதலியை பிரிந்த ஏக்கத்தில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி வயது (37). இவரது மனைவி மணிமேகலை (34), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு இருந்தார். அவரது மகன்கள் கூரை வழியாக சென்று வீட்டிற்குள் இறங்கி பார்த்த போது சுப்ரமணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பின்னர் காரிப்ப்படி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி கடைக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (34), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கவினேஷ் (6), ஜெகதீஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கும், அவரது மனைவி கோகிலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை 2 மகன்களுடன் சூரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதையடுத்து கோகிலா தனது குழந்தைகளை கணவரிடமிருந்து மீட்டு தரக்கோரி நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் அண்ணாமலையை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் குழந்தையை கோகிலாவிடம் அனுப்பி வைக்குமாறு கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த அண்ணாமலை தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு சன்னியாசி முனியப்பன் கோவில் என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தனது 2 மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தின்றுள்ளார். மாத்திரைகளை சப்பி பார்த்த குழந்தைகள் கீழே துப்பிவிட்டனர். ஆனால் அண்ணாமலை மாத்திரைகளை விழுங்கியதால் மயங்கினார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது 2 மகன்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார்.
    • தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், செமுடு குண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மானேயம்மா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஸ்ரீனிவாசுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என கூறி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த மானேயம்மா தனது குழந்தைகளுடன் லிங்கைய்ய பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனைவி பிரிந்து சென்றதால் மாமியார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் அங்குள்ள பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தி மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    இந்த நிலையில் மானேயம்மா கூலி வேலை செய்து குங்கப்பூடி கிராமத்தில் ஏல சீட்டு கட்டி வந்தார். நேற்று இரவு மானேயம்மா ஏல சீட்டு எடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார். தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற ஸ்ரீனிவாஸ் சிறிது நேரத்தில் தனக்குத்தானே உடல் முழுவதும் கத்தியால் வெட்டிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
    • கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாலசமுத்திரம்பட்டியைச் சேர்ந்தவர் செளந்தரராஜன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 22). இவரது மனைவி கோவிந்தம்மாள்.

    இவர்கள் இருவரும் எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது. இதனால் முத்துக்கு மாரை அவரது தாய் கண்டித் துள்ளார். தாய் கண்டித்த தால் மன முடைந்து காணப் பட்ட அவர், கடந்த 25-ந் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்து மயக்க மடைந்தார். அவரை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது, முத்துக்குமார் எலி மருந்தை சாப்பிட்டது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின் கடந்த 27-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந் தார். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் அருண்குமார் ( வயது 25). இவர் ஏ.சி. மெக்கானிக்கல் படித்து விட்டு, தற்போது சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி அபிராமி (21) என்ற மனைவியும், அதிதீ (1½) மகளும் உள்ளனர். இதில் அருண்குமார் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் அக்கம், பக்கம் வீடுகளில் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வின்னமங்கலம் - ஆம்பூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு அருண்குமார் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைப் பற்றி பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விவரம் தெரியவில்லை. ெரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தாரா என தெரியவில்லை.

    இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.
    பரமத்திவேலூர்,:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே எறையம்பட்டி ஆதிதிராவிடர் தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர் .இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத 2 மகள்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். 

    இந்நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் பழனிசாமி நேற்று  வீட்டிலிருந்த  மருந்தை எடுத்து குடித்து விட்டார். தனது மகளுக்கு போன் மூலம் அவரே தகவல் சொன்னதால் மகள்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×