செய்திகள்
கருப்பு பணம் வாங்கும் கமல்ஹாசன் பரிசுத்தமானவரா?- ராதாரவி
நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குவதாகவும், கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்தமானவராக இருந்தால் நாட்டுக்கு நன்மை என்றும் ராதாரவி கூறியுள்ளார். #RadhaRavi #KamalHaasan
மதுரை:
நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இது குறித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது ‘நான் அரசியலை பற்றி மட்டும்தான் பதில் அளிப்பேன்’ என பதிலடி கொடுத்தார்.
அதற்கு பதில் அளித்த அவர் ‘ரஜினி நல்ல மனிதர். ஏற்கனவே கூறியது போல், ‘லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் கமல் நன்றாக நடிக்கிறார். நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். இது கமலுக்கு நன்றாகத் தெரியும்.
கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது. அவர் நல்ல நடிகர். நடித்துக்கொண்டே இருந்து இருக்கலாம்.
நடிப்பில் முடியாததால், வாய்ப்பு இல்லாததால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார். தி.மு.க.,வை ஊழல் மூட்டை எனக் கூறும் கமல், ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருந்தால் நாட்டுக்கு நன்மை’.
இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #KamalHaasan
நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இது குறித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது ‘நான் அரசியலை பற்றி மட்டும்தான் பதில் அளிப்பேன்’ என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த நடிகர் ராதாரவி மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் ‘ரஜினி நல்ல மனிதர். ஏற்கனவே கூறியது போல், ‘லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் கமல் நன்றாக நடிக்கிறார். நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். இது கமலுக்கு நன்றாகத் தெரியும்.
கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது. அவர் நல்ல நடிகர். நடித்துக்கொண்டே இருந்து இருக்கலாம்.
நடிப்பில் முடியாததால், வாய்ப்பு இல்லாததால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார். தி.மு.க.,வை ஊழல் மூட்டை எனக் கூறும் கமல், ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருந்தால் நாட்டுக்கு நன்மை’.
இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #KamalHaasan