செய்திகள்

வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதால் தொழிலாளி தற்கொலை

Published On 2019-02-15 10:43 GMT   |   Update On 2019-02-15 10:43 GMT
கோவை அருகே வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவை அருகே உள்ள காருண்யா நகரில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

மணிமாறன் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காருண்யா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மணிமாறனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News