செய்திகள்

வாசுதேவநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2019-02-13 14:29 GMT   |   Update On 2019-02-13 14:29 GMT
வாசுதேவநல்லூர் அருகே பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இளம்பெண்ணை அவதூறாக பேசியதால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி இனிதா (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ளது. சுரேஷ் விவசாயம் செய்து வருகிறார். இனிதா தனது வீட்டருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று கடை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இனிதாவிடம் தகராறு செய்தார். அப்போது அவரை அவதூறாக பேசி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த இனிதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து இனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News