செய்திகள்

அன்னூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2019-02-13 12:11 GMT   |   Update On 2019-02-13 12:11 GMT
அன்னூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னூர்:

அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி (53) கூலித் தொழிலாளி. இவர் வேலையை முடித்து விட்டு இரவு 9 மணியளவில் தனது மொபட்டில் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயிமாபுதூர் பிரிவு அருகே சென்ற போது மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதனால் துரைசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிட்டம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணப்பன் மகன் பழனிச்சாமி (43) என்பவர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News