செய்திகள்

தேனி அருகே பள்ளியில் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய வாலிபர்கள்

Published On 2019-02-08 10:57 GMT   |   Update On 2019-02-08 10:57 GMT
தேனி அருகே பள்ளியில் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேனி:

தேனி அருகே பெரியகுளம் ஏ.வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு கண்காணப்பு பணியில் ஆசிரியர் மணிகண்டன் ஈடுபட்டிருந்தார். அப்போது மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் இரு பிரிவினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் பள்ளியில் புகுந்து மாணவர்கள் கோவிந்தராஜ், சுந்தரேசன் ஆகியோரை தாக்கி உள்ளனர்.

இதனை ஆசிரியர் மணிகண்டன் தட்டி கேட்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைய கூடாது என அவர்களை எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி சென்றுள்ளனர்.

இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தில் அந்த 2 வாலிபர்கள் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரேவந்த் (வயது23), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த காசிபாண்டியன் (20) என தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News