செய்திகள்
அரசு ஊழியர்கள் போராட்டத்தை திமுக தூண்டி விடுகிறது- பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
அரசு ஊழியர்கள் போராட்டத்தை தி.மு.க. தூண்டிவிடுகிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி:
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது-
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 14,700 கோடி சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் வழங்கமுடியவில்லை. இதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு , அரசு ஊழியர்களுக்கு எதிரி கிடையாது.
மாணவர்களின் நலன் கருதி சமுதாய அக்கறையுடன் உடனடியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும். தேர்வுகள் நெருங்குவதால் மாற்று ஏற்பாட்டை கண்டிப்பாக அரசு செய்யும்.
இந்தபோராட்டத்தை சில அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. தூண்டிவிடுவது கண்டிக்கத்தக்கது.
கஜானாவிற்கு வரும் வருவாயை முழுமையாக ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது-
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 14,700 கோடி சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் வழங்கமுடியவில்லை. இதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு , அரசு ஊழியர்களுக்கு எதிரி கிடையாது.
மாணவர்களின் நலன் கருதி சமுதாய அக்கறையுடன் உடனடியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும். தேர்வுகள் நெருங்குவதால் மாற்று ஏற்பாட்டை கண்டிப்பாக அரசு செய்யும்.
இந்தபோராட்டத்தை சில அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. தூண்டிவிடுவது கண்டிக்கத்தக்கது.
கஜானாவிற்கு வரும் வருவாயை முழுமையாக ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.