செய்திகள்

சாத்தூர் அருகே மெக்கானிக் கொலை

Published On 2019-01-07 10:26 GMT   |   Update On 2019-01-07 10:26 GMT
சாத்தூர் அருகே மெக்கானிக் டிப்ளமோ பட்டதாரி படுகொலை செய்யப்பட்டார்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னக்காமன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது27), டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார்.

சென்னையில் வேலை பார்த்த இவர், கடந்த ஆண்டு ஊர் திரும்பினார். அதன் பிறகு எட்டூர்வட்டம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை கார்த்திகேயன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கார்த்திகேயன் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காட்டுப் பகுதியில் அவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.

சம்பவ இடத்திற்கு சாத்தூர் போலீசாரும், உறவினர்களும் சென்று பார்த்தனர். அங்கு தலை நசுங்கிய நிலையில் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது தலையில் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News