செய்திகள்
கோவை அருகே ஆட்டோ மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சுங்கம், தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு சுங்கம் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோ, கோபாலகிருஷ்ணன் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.
தகவல் அறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். ஆட்டோ டிரைவரான ராமநாதபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (32) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.