செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக் நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. #anitharadhakrishnanmla
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.அருணாசலம் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #anitharadhakrishnanmla