செய்திகள்
வாட்ஸ்அப்பில் ஆசிரியைக்கு ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
அயனாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு செல்போனில் தொடர்ச்சியாக ஆபாச தகவல்கள் வந்தன. வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப்பில் வரும் நம்பரை வைத்து ஆபாச தகவல் அனுப்பியவரின் முகவரியை கண்டு பிடித்தனர்.
அசோக்நகர் 88-வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 24). 11-வது அவென்யூ பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) ஆகியோர் தான் ஆபாச புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆவார்.
அயனாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு செல்போனில் தொடர்ச்சியாக ஆபாச தகவல்கள் வந்தன. வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப்பில் வரும் நம்பரை வைத்து ஆபாச தகவல் அனுப்பியவரின் முகவரியை கண்டு பிடித்தனர்.
அசோக்நகர் 88-வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 24). 11-வது அவென்யூ பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) ஆகியோர் தான் ஆபாச புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆவார்.