search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் கைது"

    • 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார்
    • பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது.

    திருப்பூர் : 

    கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இந்த தம்பதிக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 12&ந் தேதி சேலத்திற்கு காரில் சந்தோஷ்குமார் குடும்பத்துடன் புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, இவர்களது கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ்குமார் மற்றும் 6 மாத பெண் குழந்தையான காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இந்துமதி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சந்தோஷ்குமார் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது கோவை சௌரிபாளைத்தை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சித்தார்த் (22) என்பவரது கார் என்பது தெரியவந்தது. சித்தார்த் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த க்ளாட்வின் (21), ஆண்ட்ரிவ் (22), ஜீவன் (22) மற்றும் அருண் (22) ஆகியோர்களுடன் செங்கப்பள்ளிக்கு வரும் போது, விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் சித்தார்த் உள்பட 5 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்த சித்தார்த் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், கவனக்குறைவாக ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 35 கிராம் எடையுள்ள 7 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடை பெறுவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. இந்த நிலையில் புதுக்கடை அருகேயுள்ள அம்சி, கீழ்குளம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் நேற்று அந்த பகுதியில் புதுக்கடை சப் - இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது கீழ்குளம் அருகே தண்டுமணி பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து, வாகனத்துடன் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கடை அருகே அம்சி ஒருபிலாவிளைபகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெப்ரின் விஜய் (வயது 19) என தெரிய வந்தது. மேலும் அவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 35 கிராம் எடையுள்ள 7 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    • லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

    இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கோவிந்தவாடி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது. லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் மாணவியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது.

    இதையடுத்து மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். மாணவியின் கர்ப்பம் தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • சிறுமியை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பத்ரிநாத் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்தநிலையில் பத்ரிநாத் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மருதமலை அடிவாரத்தில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த தனது தாயிடம் பத்ரிநாத் மாணவிக்கு 18-வயது கடந்து விட்டதாகவும், 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரையும் வீட்டில் தங்க அனுமதித்தார். அப்போது பத்ரிநாத் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். அவரை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்த போது மாணவி 18 வயதிற்கு முன்பே கர்ப்பமானது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 16 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் பத்ரிநாத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×