செய்திகள்
சேலம் அருகே ஓடும் ரெயிலில் லேப்-டாப்-செல்போன் திருடிய வாலிபர் கைது
சேலம் அருகே ஓடும் ரெயிலில் லேப்-டாப்-செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் இன்று அதிகாலை சேலம் புதிய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்தார். இதை பார்த்த பள்ளப்பட்டி போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் லேப்-டாப் மற்றும் ஆப்பிள் போனும் இருந்தது.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய போது அந்த பொருட்களை பெங்களூரில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் சென்ற கார்த்திகா என்ற பெண்ணிடம் ரெயிலில் இருந்து திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.