செய்திகள்

பட்டாசு ஆலைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

Published On 2018-12-08 12:09 GMT   |   Update On 2018-12-08 12:09 GMT
பட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். #ministerrajendrabalaji #fireworksmill

சிவகாசி:

சிவகாசியில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாது அணையை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்டா மக்களின் பிரச்சினை முதல்வருக்கு நன்றாக தெரியும். எனவே தான் சட்டமன்றத்தை கூட்டி கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். மேலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டிய முதல்வர் தமிழக பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தி உள்ளார்.


தமிழகத்தின் உரிமை பறி போகக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். கஜா புயல் நிவாரணத்துக்காக தமிழக அரசு ரூ. 1401 கோடியை ஒதுக்கியுள்ளது. புயல் பாதிக்கப்பட்ட மன்னார் குடியில் 2 நாட்களில் மின்சார சப்ளை செய்யப்பட்டு உள்ளது. 24 வகையான நிவாரண பொருட்கள் வீடு, வீடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்டாசு உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் பேச உள்ளேன். தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்ற வேடிக்கை பார்க்காமல் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #fireworksmill

Tags:    

Similar News