செய்திகள்

கிச்சிப்பாளையத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2018-12-05 10:59 GMT   |   Update On 2018-12-05 10:59 GMT
கிச்சிப்பாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா (வயது 21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில் ஹேமலதா சாணி பவுடரை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள்அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்த போது தீராத வயிற்று வலியால் ஹேமலதா அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News