செய்திகள்

போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திய வாலிபர் கைது- மேலும் 2 பேர் தப்பி ஓட்டம்

Published On 2018-12-03 12:03 GMT   |   Update On 2018-12-03 12:03 GMT
ஆசாரிப்பள்ளம் அருகே போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திய வாலிபரை கைது செய்த போலீசார் இது குறித்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள பெருவிளையைச் சேர்ந்தவர் ராணி. நேற்று மாலை இவரது வீடு மீது 3 வாலிபர்கள் கல்வீசி தாக்கினர்.

இதுதொடர்பாக ராணி ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் ஏட்டு செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணி வீடு மீது கல் வீசிய 3 வாலிபர்களையும் அவர்கள் பிடிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி 3 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் ஒரு வாலிபர் ஏட்டு செந்திலிடம் சிக்கிக் கொண்டார். அந்த வாலிபரை தப்பிக்க விடாமல் ஏட்டு செந்தில் மடக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஏட்டு செந்திலை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். செந்திலின் கையில் கத்திக்குத்து விழுந்து ரத்தம் கொட்டியது.

அவரை உடன் வந்திருந்த போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ஏட்டு செந்தில், ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஏட்டுவை கத்தியால் குத்தியது கீழபெருவிளையைச் சேர்ந்த பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட அஜித், மிக்கேல் என்ற வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே வீடு மீது கல்வீசியது தொடர்பாக ராணியும் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகனுடன் ஏற்பட்ட தகராறில் 3 வாலிபர்கள் எங்கள் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்த எனது மகனை அவர்கள் மிரட்டி விட்டு தொடர்ந்து கல்வீசினர்.

எனவே அத்துமீறி நடந்து கொண்ட பிரகாஷ், அஜித், மிக்கேல் ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரிலும் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். #tamilnews
Tags:    

Similar News