செய்திகள்

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ. 1 கோடி நிதி- திமுக அறிவிப்பு

Published On 2018-11-19 05:35 GMT   |   Update On 2018-11-19 05:35 GMT
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். #DMK #MKStalin #GajaCyclone
சென்னை:

கஜா புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் வகையிலும், மறுசீரமைப்பு, மறு கட்டமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்கப்படுகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில், மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதே போல்,  கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சார்பில் அவர்களின் ஒரு மாத ஊதியம் நிதியாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  #DMK #GajaCyclone
Tags:    

Similar News