செய்திகள்

திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published On 2018-11-18 15:09 GMT   |   Update On 2018-11-18 15:09 GMT
சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
திருவாரூர்:

கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வந்து பள்ளிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். #GajaCyclone
Tags:    

Similar News