செய்திகள்

வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் சப்ளை செய்த ஏட்டு சஸ்பெண்டு

Published On 2018-11-17 10:11 GMT   |   Update On 2018-11-17 10:11 GMT
வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்த தலைமை சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

கடந்த 2 மாதங்களில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பாகாயம் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் ஜெயிலில் பணியாற்றும் முதன்மை தலைமை சிறைக்காவலர் செல்வின் தேவதாஸ் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள், ஏட்டு செல்வின் தேவதாசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News