செய்திகள்

தமிழக அரசுக்கு நன்றி- கமல்ஹாசன்

Published On 2018-11-16 10:03 GMT   |   Update On 2018-11-16 10:03 GMT
கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசு நன்றி என்று டுவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #KamalHaasan #TNGovt
சென்னை:

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி.


பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #KamalHaasan #TNGovt
Tags:    

Similar News