செய்திகள்
தேனி அருகே மனைவி குடிபழக்கத்தை கண்டித்ததால் கணவர் தற்கொலை
தேனி அருகே மனைவி குடிப்பழக்கத்தை கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே கோம்பை அரண்மனைத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மனைவி கண்டித்த போதும் பாண்டியராஜன் தொடர்ந்து மது குடித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டுக்கு போதையில் தள்ளாடியபடியே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தினமும் குடித்து விட்டு வருகிறீர்களே என்று கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.